தனியார் பேரூந்தில் பயணச் சீட்டு கட்டாயம்… நாளையிலிருந்து பயணிகளிடமும் தண்டப்பணம்…

தனியார் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேரூந்து பயணச் சீட்டுக்கள் பெற்றுக் கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேல்மாகாண அனைத்து தனியார் பேரூந்துகளிலும் பயணிகளுக்கு பயணச் சீட்டுக்கள் வழங்குவது பேரூந்து நடத்துனர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் துஸித குணரத்ன தெரிவித்துள்ளார்.

பயணச் சீட்டுக்கள் இல்லாமல் பயணித்தால் 100 ரூபாய் அபராதமும் பயணச் சீட்டு பெறுமதியின் இரு மடங்கு தண்டப்பணமும் அறவிடப்படும் அதேவேளை, பயணச் சீட்டுக்கள் வழங்காத பேரூந்து நடத்துனர்களுக்கு முதலாவது முறை 250 ரூபாவும், இரண்டாவது 500 ரூபாவும், மூன்றாவது முறை 1,000 ரூபாவும் தண்டப்பணம் அறவிடப்படும்.

 

(rizmira)