மினுவங்கொடை – கொழும்பு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத வீதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு கொழும்பில் இருந்து மினுவங்கொடை மற்றும் குருணாகலை நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்துகளும் இணைந்துள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.