(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான, நிதியை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குத்தகை தவணைக் கட்டணத்துக்கு அப்பால் குறித்த நிவாரணங்களை வழங்க அமைச்சு இணங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.