தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

100 மற்றும் 101 பாணதுறை – கொழும்பு மற்றும் மொறட்டுவை – கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று(18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூர பிரதேச சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், குறுகிய தூர சேவை பேரூந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.