தனி சிகரெட் விற்பனை குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து…

தனியாக ஒரு சிகரெட்டை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டதிட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் இன்று(20) கைச்சாத்திடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் காரணமாக நாட்டில் 47% புகைத்தல் பாவனை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும், மல்வானை பிரதேசத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புகைத்தல் காரணமாக நோய் வாய்ப்புக்குட்பட்டவர்களுக்காக வருடாந்தம் 72 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..

(rizmira)