முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(05) பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ‘மக்கள் மகிமை’ பேரணியில் தெரிவித்த கருத்து தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
“ஜனாதிபதிக்கு தன்னுடன் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும், சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற செயற்பாடுகளினால் அரசியலமைப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தி மக்களை ஆபத்தில் தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது” என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
