தன்னை “சேர்” என அழைக்க வேண்டும்.. மஹரகம நகர சபையின் தலைவரால் கட்டளை…

தன்னை “சேர்” (sir) என்றழைக்குமாறு, மஹரகம நகர சபையின் தலைவர் டிராஜ் லக்ருவன் ஜயரத்னவினால் (Tiraj lakruwan jayarathna), அறிவித்தல் பல​கையொன்று வைக்கப்பட்ட சம்பவம், மஹரகம நகரசபையில் இடம்பெற்றுள்ளது.

அந்த அறிவித்தல் பலகையில்,

நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்ப​தாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல மக்களும், தன்னை “சேர்” என்று அழைக்கவேண்டும்.

இப்படிக்கு,
தலைவர், நகர சபை, மஹரகம நகர சபை.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.