தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…

தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(14) நான்காவது நாளாக தொடர்வதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் சகல அஞ்சலகங்களிலும் 13 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கி கிடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.