தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(FASTNEWS|COLOMBO) – தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.