(FASTNEWS|COLOMBO)- இன்று(22) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தபால் சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார்.
சேவை யாப்பில் உள்ள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாததன் காரணமாக மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தபால் சேவையாளர் சங்க மேலும் தெரிவித்துள்ளார்