தபால் திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகின்றனர்…

தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் வழங்குகின்ற தீர்வு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும் எனவும் தபால் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளளது.

தபால் திணைக்களத்தை கட்டுப்பாட்டு சபையால் கட்டுப்படுத்தப்படுகின்ற அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் குறிப்பிடிருந்தார்.