தமிழக மீனவன் கொலை – பதிலடியாக இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் 10 பேர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.