தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பிற்கு மைத்ரிபால சிறிசேன இரங்கல்..

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது இரங்கல்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த செய்தியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.