தமிழர்களை பங்காளிகளாக்கும் கோட்டாவின் அரசில் மேலும் இரு தமிழர்களுக்கு அமைச்சுப் பதவிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய காபந்து அரசாங்கத்தில் தமிழர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்படி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

நாளைய தினம்(25) 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.