(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில், அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான தீப திருநாளில் இலங்கை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் எமது இலங்கை சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும். என்று தெரிவித்துள்ளார்.
அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான தீப திருநாளில் இலங்கை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் எமது இலங்கை சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும். #தீபாவளிநல்வாழ்த்துக்கள்
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 27, 2019
குறித்த வாழ்த்து செய்திக்கு அவரது ஆதரவாளர்கள், மகிழ்ச்சியில் அதனை ரீடுவிட் செய்துவருகின்றனர்.