தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில்..

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இன்று காலை முதல் அவர்கள் உணவு உண்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலைகளில் உள்ள 99 பேரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக சிறையிலுள்ள தாம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக தெரியவந்துள்ளது.