தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் காரணங்கள் சில குறித்து ஆராய இன்று(02) கூடவுள்ளதாக குறித்த கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் நிலவரங்கள், இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்(31) வெளியிட்டிருந்த கருத்து தொடர்பிலும் கூட்டமைப்பு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.