இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு 20 போட்டி லாகூரில் இடம்பெறவுள்ள நிலையில், அதன் தலைமை குசல் பெரேராவுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உபுல் தரங்க பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவிக்காமையினாலேயே குறித்த தலைமைப் பதவி குசலுக்கும், உப தலைவர் பதவி திசர பெரேராவுக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இருபதுக்கு 20 போட்டியானது ஒக்டோபர் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.
(rizmira)