தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் என போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்களினாலேயே அதிகளவான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றதுடன், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இவ்வாறான தரமற்ற தலைகவசங்கள் காரணமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
கம்பா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வீதிவிபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் அமைச்சர் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.