கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை(05) வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 3 இலட்சத்து 50 ஆயிரத்து 728 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.