(FASTNEWS|COLOMBO) – மியன்மார் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானத்தின் முன்பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே விமானம் தரையிரங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது விமானத்தில் 7 பணியாளர்கள் உட்பட 89 பேர் பயனித்துள்ளதுடன், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.