(FASTNEWS|COLOMBO) –கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட ரயில்வே பொதி போக்குவரத்து சேவையானது, இன்று (01) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொதிகளை கையளிக்கும் போது, அதில் உள்ள பொருட்கள் தொடர்பில் ரயில் நிலைய பொறுப்பதிகாரியிடம் காண்பித்து உறுதி செய்த பின்னர், விதிமுறைப்படி சீல் செய்து குறித்த பொதிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.