தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட, மாபெரும் கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி முகத்திடல் பகுதியில் குறித்த கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கர்திணால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய, இந்நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், மீளவும் இந்நடவடிக்கைகள் பிரதமரின் பணிப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இப்பணிகளை முன்னெடுக்கும் குழுவின் தலைவர் மங்கள பி.குணசேகர தெரிவித்துள்ளார்.