சாவக்கச்சேரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவம் குறித்து வினவியதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
ரூபா.1,400 மில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட நிதியமைச்சின் புதிய கட்டிடத் தொகுதியொன்றினை நேற்றையதினம்(31) திறந்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி நேற்று(30) (அதாவது நேற்றைய முதல் நாள்) அதிகாலையிலேயே குறித்த விவகாரம் தொடர்பில் தேடியறியுமாரும் தன்னை கோரியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.