தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்

நுவ­ரெ­லியா மாவட்ட அம்­ப­க­முவ பிர­தேச சபை  முன்­பாக நேற்றுக். காலை 10 மணிய­ளவில்  அம்­ப­க­முவ பிர­தேச சபை உறுப்­பி­னர்­களால் உள்­ளூ­ராட்சி மன்­ற­த் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­தக்­கோரி தலை­கீ­ழாக நின்று ஆர்ப்­பாட்டம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது.

அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக உள்­ளூ­ராட்சி மன்ற தேல்­தலை நடத்­தாமல் அர­சாங்கம் காலம் தாழ்த்­து­வ­தா­கவும் உட­ன­டி­யாக உள்­ளு­ராட்சி தேர்­தலை நடத்­து­மாறு இரண்டு கால்­க­ளாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்­க­வில்லை.

ஆகவே,  இன்று  நாம் தலை­கீ­ழாக பிர­தேச சபையின் முன்னால் நின்று போராட்­டத்­தி­னூ­டாக தெரி­விக்­கின்றோம் என இதன் போது தெரி­வித்­தனர்.

மேற்­படி ஆர்ப்­பாட்­டத்தில் அம்­ப­க­முவ பிர­தேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எலப்பிரிய நந்தராஜ் மற்றும் டக்ளஸ் தர்மகீர்த்தி ஆகியோரும் ஈடுபட்டனர்