(FASTNEWS| COLOMBO)- தமிழ் – சிங்கள புத்தாண்டில் பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் நாளை(17) காலை 7.40 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.
கிழக்கு நோக்கிய பார்வையுடன், பச்சை நிற வஸ்து அல்லது அதற்கு சமமான ஆடை அணிந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.