தலைமை கொல்லப்பட்டதாக IS பயங்கரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமது அமைப்பின் தலைவராக செயற்பட்ட அபூ பகர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு ஒன்றில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அபூ இப்ராஹிம் அல்-ஹஸ்மி அல்-குரேஸி என்பவரே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.