தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகல்..

தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏ.பி.டி.வில்லியர்ஸ் விலகியுள்ளார்.

அத்துடன் அவர் இலங்கை அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

காயம் காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஃபப் டு ப்ளசி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்க சபை இதனை உறுதிப்படுத்தி உள்ளதோடு; ஃபப் டு ப்ளசியின் நியமனம் நிலையானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.