(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் டெஸ்ட் அணி தலைவர் பதவியில் இருந்து சப்ராஸ் அஹமத்தை நீக்க வேண்டும் என்று ஷாஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சப்ராஸ் அஹமட் தலைவராக இருந்து வருவதுடன் உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்குப்பின் அவரது தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இலங்கை தொடருக்கான இருபதுக்கு – 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதனையடுத்து டெஸ்ட் போட்டியிலும் தலைவராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து சப்ராஸ் அகமதுவை நீக்க வேண்டும் என ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
‘சப்ராஸ் அகமது டெஸ்ட் போட்டியின் தலைவராகாமல் இருந்தால், அது அவருக்கு சிறந்ததாக இருக்கும். மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவர் தலைவர் பதவியில் இருந்தால், அது மிகப்பெரிய சுமையாக இருக்கும் என்று ஷாஹிட் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.