(FASTNEWS|COLOMBO) பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது, தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.