இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று இரவு அவரது வாகனத்தின் பின்னால் பயணித்த மற்றும் ஒரு வாகனம் தொடர்பில் தற்போது குற்ற விசாரணை திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாஜுடீன் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(14) எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதிக்கு பதிலாக ஆஜராகிய பிரதி சொலிஸ்டர் ஜெனரால் குறித்த இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அந்த கொலை இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி செயலகத்திலும், ஜனாதிபதி இல்லத்திலும் இருந்து பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இதன் போது உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.