இலங்கை ரகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்லவென்றும் அது கொலை எனவும் இரகசிய பொலிஸார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த வழக்கில் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியர்களின் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் இது விபத்தல்ல கொலை என தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்வழக்கு குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(riz)