முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க இன்று(10) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த இருவரையும் ஆகஸ்ட் 24 ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்ட காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வசீம் தாஜூடின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
எனினும் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே தாஜூடின் கொலை செய்யப்பட்டார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.