றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீன் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அனுர சேனாநாயக்கவின் இந்த மனுவுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
அனுர சேனாநாயக்க தாக்கல் செய்திருந்த பிணை கோரும் மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.