தாஜூதீனின் கொலையில் சிராந்தி தொடர்பு

ரக்பி வீரர், வாஸிம் தாஜூதீனின் கொலையில் சிராந்தி ராஜபக்சவின் ‘சிரிலிய’ நிறுவனத்துக்கு தொடர்பிருக்கலாம் என்ற வகையில் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2012ம் ஆண்டு மே மாதம் கொழும்பு பார்க் வீதியில் தாஜூதீன் தமது காரில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முடியும் வரை, அவர் விபத்து ஒன்றிலேயே இறந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுவந்தன.

எனினும் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்தவுடன் தாஜூதீனின் மரணம் கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 10ம் திகதியன்று அவரின் சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் அவரின் கொலைக்கு சிராந்தி ராஜபக்சவின் சிரிலிய அமைப்புக்காக பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு  அதிகாரிகள் மூவர் தொடர்பு- ராஜித

வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று, அரச  தகவல் திணைக்களத்தில் நடைப்பெற்ற பத்திரிகை சந்திப்பின் போதே இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.