(FASTNEWS|COLOMBO) தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(09) காலை 8 மணியுடன் நிறைவடையவுள்ளது.
பதவி உயர்வு, சம்பள பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.