நடிகை நயன்தாராவின் 3 வது காதலன் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.மேலும் காதலிப்பதை உறுதிப்படுத்த இவர்கள் இருவரும் இணைந்தே அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தனர். அனைத்து டிவி விழாக்களுக்கு கூட இருவரும் இணைந்ததே தான் சென்று வந்தனர்.
இவர்கள் இருவரும் அவர்களது காதல் குறித்து உறுதி செய்யாவிட்டாலும், கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் பல படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.
மேலும், படத்தின் வெற்றிக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்திருக்கிறார்கள். இருவரும் கோவிலுக்கு செல்ல அங்குள்ள ரசிகர்கள் நயன்தாராவுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள்.
