தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படகு மூழ்கி விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.