தாமதமாகி ஹோட்டல் அறைக்கு வந்த லஹிரு குமார டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கம்..

கிரிக்கெட் வீரர் ஒழுக்க ஒழுங்கு முறைமைகளை மீறியமை குறித்த சட்டத்தின் கீழ், லஹிரு குமாரவை இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் தெரிவிப்பதாவது; குறித்த வீரர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு தாமதித்து வருகை தந்திருந்ததாகவும் அவருக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(06) ஆரம்பமாகவுள்ள இலங்கை -இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்காக அவருக்கு மாற்றீடாக வேகப்பந்து வீச்சாளர் லக்ஷமன் சமீர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.