தாமரை மொட்டு இல்லையா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுஜன பெரமுன- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி அமையப்பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கதிரை சின்னத்தில் இருகட்சிகளும் புதிய கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் தாமரை மொட்டு சின்னம் மற்றும் கை சின்னம் இல்லமல் புதிதாக கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயத்தில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு இணக்கம் தெரிவிக்குமாக இருந்தால் இரு கட்சிகளின் கீழ் மட்ட உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் மற்றும் கட்சி தாவல் இடம் பெறலாம் என அரசியல் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.