(FASTNEWS|COLOMBO)- தாய்வான் நாட்டின் இலான் கவுண்டியில் இன்று(08) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் தைபேயிலும் கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் உயிர்ச்சேதம் எதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.