தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயினால் 9 பேர் உயிரிழப்பு…

தாய்வானின் நியூ தய்பேய் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று(13) காலை பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நோயாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் நகரக்கூடிய கட்டில் ஒன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறினால் தீ பரவ ஆரம்பித்திருக்கலாம் என ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.