(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சஜித்தின் முழுமையான அரசியல் பயணத்தை முகாமைத்துவம் செய்யும் நபராக அவரது தாயார் ஹேமா பிரேமதாஸவே செயற்படுகிறார்.
அரசியலில் சஜித் கால் பதிப்பதற்கு அவரது தாயார் ஹேமா பிரேமதாஸவின் பங்கு அளப்பரியது. அன்று தாயாரினால் தான் ஐக்கிய தேசிய கட்சியில் சஜித்திற்கு உறுப்புரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் உறுப்புரிமை பெற்ற தினத்தில் சஜித்திற்கு தாயார் இரண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அதில் ஒன்று தனது தந்தைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கட்சியை விட்டு ஒரு நாளும் செல்ல கூடாது மற்றையது தந்தையை பாதுகாத்த ரணிலை பாதுகாக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.
அன்மையில் இதேகருத்தை மீண்டும் சஜித்திடம் அவரின் தயார் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாயின் வார்த்தைகளை மீறி ஒருபோதும் சஜித் செயற்படாதவர் என்பதனை ரணிலும் நன்கு அறிந்தவர் என அரசியல் விற்பன்னர்கள் குறிப்பிட்டுள்ளனர்.