கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலாகும் வகையில் நாளை(06) காலை 6 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
————————————————————————————UPDATE
திகன தெல்தெனியா பிரதேசத்தில் பதற்றம்…
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் , தெல்தெனிய பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பொலிசார் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.