(FASTNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – பனாகொடை பிரதான வீதியின் திகலவத்தை பகுதியில் இன்று(20) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.