பிரபல சிங்கள நடிகை அஞ்சலி லியனகேவின் பிறந்த தினமான கடந்த மார்ச் 29 ஆம் திகதி அவரது செல்போனுக்கு அழைப்பொன்று வந்துள்ளது.
தொலைபேசியில் அதிகாலையில் தொடர்பு கொண்ட நபர் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
சக நடிகை எவரே தன்னை குழப்புவதற்காக இந்த தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதாக எண்ணிய அஞ்சலி, தொலைபேசியில் பேசி நபருக்கு பதிலளித்துள்ளார்.
இனிய காலை வணக்கம் அஞ்சலி நான் ஜனாதிபதி பேசுகிறேன் என தொலைபேசியின் மறுமுனையில் பேசியவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அஞ்சலி, தேவையில்லாத வம்புகளை பேசாது பெயரை கூறுங்கள் ஹலோ.. எனக் கூறியுள்ளார்.
அவரது இந்த பதிலால் குழம்பி போன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியை துண்டித்துள்ளார். இதனையடுத்து தனது பணியாளர்கள் மூலம் வழமை போல் மெதமுலன பாஷையில், அஞ்சலிக்கு பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.