இலங்கை தேசிய கிரிக்கெட் அணியானது இந்நாட்களில் மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் நிலையில், டெஸ்ட் தலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்து அணியுடனான சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியானது மிகவும் மோசமாக விளையாடியமை காரணமாக தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்திற்கு முன்னர் தலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்வாறே, குறித்த சம்பவம் தொடர்பில் இன்று(05) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதோடு, தினேஷ் சந்திமாலின் டெஸ்ட் தலைமையானது தற்போது டெஸ்ட் உப தலைவராக உள்ள திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.