பல்லம, திபிரிகொல்ல பகுதியில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க நபரொருவர் எரியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்து குப்பைகளை எரித்த போது எரிந்து கொண்டிருந்த குப்பையில் தவறுதலாக விழுந்தே அவர் இவ்வாறு எரியுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்..
பிரேத பரிசோதனைகள் இன்று(07) நடைபெற உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.
#####