திமுத் இன்று(01) நீதிமன்றில்…

(FASTNEWS|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் திமுத் கருணாரத்னவை இன்று(01) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.