மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் கினிகத்தேனை தியகல – வட்டவளை பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளை முதல் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மழை பெய்து வருவதனால் வீதி வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.